search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒலிம்பிக்கில் பதக்கத்தை உறுதி செய்த சிந்து: பிரதமர்-ஜனாதிபதி வாழ்த்து
    X

    ஒலிம்பிக்கில் பதக்கத்தை உறுதி செய்த சிந்து: பிரதமர்-ஜனாதிபதி வாழ்த்து

    ஒலிம்பிக் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பி.வி. சிந்துவிற்கு பிரதமர், ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    ஒலிம்பிக் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து 6-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நோஜோமி ஒகுஹாராவுடன் மோதினார்.

    இதில் சிந்து 21-19, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

    பி.வி. சிந்துவின் இந்த வெற்றி மூலம் இந்தியாவிற்கு வெள்ளி அல்லது தங்க பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

    பேட்மிண்டன் இறுதிப்போட்டிற்கு முன்னேறியுள்ள சிந்துவிற்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ‘இந்த வெற்றியின் மூலம் பி.வி. சிந்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். இறுதிப்போட்டியில் அவர் வெற்றிபெற வாழ்த்துகிறேன்’ என்று பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    ‘சிறப்பாக விளையாடிய பி.வி. சிந்துவிற்கு எனது வாழ்த்துகள். இறுதிப்போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்’ என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

    மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ஜனதா தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, வெளியுறுவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களும் பி.வி. சிந்துவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×