என் மலர்
செய்திகள்

ரியோ ஒலிம்பிக்: 2000 வீரர்- வீராங்கனைகளின் மாதிரி சோதனை செய்யப்பட்டுள்ளது - ஐ.ஓ.சி.
ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு விளையாடி வரும் வீரர் - வீராங்கனைகளின் 2000 பேரின் மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்கா நாடான பிரேசிலின் தலைநகர் ரியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கு முன் வீரர்கள், வீராங்கனைகள் ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கியது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பீஜிங்கில் 2008-ம் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரிலும், 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரிலும் பங்கேற்ற வீரர்களின் மாதிரி மறுபரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது ஏராளமான வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரிய வந்தது. அத்துடன் ரஷ்யாவில் நடைபெற்ற சோச்சி ஒலிம்பிக்கில் ரஷியாவே வீரர்கள் ஊக்க மருந்து எடுத்துக்கொள்ள உதவியது தெரியவந்தது.
இதனால் ரியோ ஒலிம்பிக் வெளிப்படைத் தன்மையாக இருக்க வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விரும்பியது.
அதன்படி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளிடம் எடுக்கப்பட்டுள்ள மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. 4500 வீரர்கள் - வீராங்கனைளிடம் எடுக்கப்பட்ட சிறுநீர் மற்றும் 1000 வீரர்கள் - வீராங்கனைகளிடம் எடுக்கப்பட்ட ரத்த மாதிரி ஆகியவற்றை பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் இதுவரை 2000-க்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
இந்த சோதனையில் பாசிட்டிவ் முடிவுகள் வந்ததா? என்பது குறித்து விளக்கம் அளிக்க ஐ.ஓ.சி. மறுத்துவிட்டது.
பீஜிங்கில் 2008-ம் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரிலும், 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரிலும் பங்கேற்ற வீரர்களின் மாதிரி மறுபரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது ஏராளமான வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரிய வந்தது. அத்துடன் ரஷ்யாவில் நடைபெற்ற சோச்சி ஒலிம்பிக்கில் ரஷியாவே வீரர்கள் ஊக்க மருந்து எடுத்துக்கொள்ள உதவியது தெரியவந்தது.
இதனால் ரியோ ஒலிம்பிக் வெளிப்படைத் தன்மையாக இருக்க வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விரும்பியது.
அதன்படி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளிடம் எடுக்கப்பட்டுள்ள மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. 4500 வீரர்கள் - வீராங்கனைளிடம் எடுக்கப்பட்ட சிறுநீர் மற்றும் 1000 வீரர்கள் - வீராங்கனைகளிடம் எடுக்கப்பட்ட ரத்த மாதிரி ஆகியவற்றை பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் இதுவரை 2000-க்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
இந்த சோதனையில் பாசிட்டிவ் முடிவுகள் வந்ததா? என்பது குறித்து விளக்கம் அளிக்க ஐ.ஓ.சி. மறுத்துவிட்டது.
Next Story






