என் மலர்
செய்திகள்

ஒலிம்பிக் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்தேனா?: விஜய் கோயல் விளக்கம்
பிரேசில் நாட்டில் நடைபெற்றுவரும் ரியோ ஒலிம்பிக் விளையாட்டுகளில் இந்திய அணி பங்கேற்ற ஆக்கி போட்டியின் போது அரங்கிற்குள் அனுமதியின்றி நுழைந்ததாக கூறப்பட்ட புகாரை விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் மறுத்துள்ளார்.
ரியோ:
ரியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்கப்படுத்துவதற்காக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் அங்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், போட்டி நடக்கும் அரங்கிற்கு அங்கீகார அட்டை இல்லாதவர்களையும் தன்னுடன் விஜய் கோயல் அழைத்துச் சென்றதாகவும் அப்போது விஜய் கோயல் தரப்புக்கும், ஒலிம்பிக் கமிட்டி அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடந்தால் விஜய் கோயலின் அடையாள அட்டையை ரத்து செய்ய நேரிடும் என்று ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு கமிட்டி எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், இது குறித்த புகாரை விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் மறுத்துள்ளார்.
இந்திய அணி பங்கேற்கும் ஆக்கி போட்டியில், அவர்களை ஊக்குவிக்கதான் மைதானத்திற்கு சென்றேன். அதற்காகதான் நாங்கள் இங்கு வந்துள்ளோம். அது எப்படி ஒரு குற்றம் ஆகும்? இதில் எனக்கு எதிராக எந்த புகாரும் இல்லை. தவறான புரிதலால் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ரியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்கப்படுத்துவதற்காக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் அங்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், போட்டி நடக்கும் அரங்கிற்கு அங்கீகார அட்டை இல்லாதவர்களையும் தன்னுடன் விஜய் கோயல் அழைத்துச் சென்றதாகவும் அப்போது விஜய் கோயல் தரப்புக்கும், ஒலிம்பிக் கமிட்டி அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடந்தால் விஜய் கோயலின் அடையாள அட்டையை ரத்து செய்ய நேரிடும் என்று ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு கமிட்டி எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், இது குறித்த புகாரை விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் மறுத்துள்ளார்.
இந்திய அணி பங்கேற்கும் ஆக்கி போட்டியில், அவர்களை ஊக்குவிக்கதான் மைதானத்திற்கு சென்றேன். அதற்காகதான் நாங்கள் இங்கு வந்துள்ளோம். அது எப்படி ஒரு குற்றம் ஆகும்? இதில் எனக்கு எதிராக எந்த புகாரும் இல்லை. தவறான புரிதலால் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story






