என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒலிம்பிக்: பளுதூக்கும் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் 4-வது இடம்
    X

    ஒலிம்பிக்: பளுதூக்கும் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் 4-வது இடம்

    ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம் இறுதிச்சுற்றில் 4-வது இடத்தைப் பிடித்தார்.
    ரியோ:

    தமிழகத்தின் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்ற அவர், இன்று நடைபெற்ற 77 கிலோ கிலோ எடைப்பிரிவினருக்கான குரூப்-பி இறுதிச்சுற்றில் களமிறங்கினார்.

    இதில் ஸ்னாட்ச் பிரிவில் 148 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 181 கிலோவும் என மொத்தம் 329 கிலோ எடையைத் தூக்கினார் சதீஷ். இதன்மூலம், அவரால் 4-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

    கொலம்பிய வீரர் ஆண்ட்ரஸ் மயுரிசியோ 346 கிலோ எடையை தூக்கி முதலிடத்தையும், ஸ்பெயின் வீரர் ஆண்ட்ரஸ் எட்வர்டோ 343 கிலோ தூக்கி 2-வது இடத்தையும், ஜெர்மனியின் முல்லர் நிகோ 332 கிலோ எடை தூக்கி 3-வது இடத்தையும் பிடித்தனர்.
    Next Story
    ×