search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒலிம்பிக் கிராமத்தில் 2-வது சம்பவம்: பாலியல் குற்றச்சாட்டில் குத்துச்சண்டை வீரர் கைது
    X

    ஒலிம்பிக் கிராமத்தில் 2-வது சம்பவம்: பாலியல் குற்றச்சாட்டில் குத்துச்சண்டை வீரர் கைது

    ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள நமீபியா குத்துச்சண்டை வீரர் பாலியல் புகாரில் கைதாகி உள்ளார்.
    நமீபியா நாட்டை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் ஜோனாஸ் ஜினியஸ் (வயது 22). ஒலிம்பிக் தொடக்க விழாவில் அந்நாட்டு தேசிய கொடியை ஏந்தி வந்தவர் ஆவார்.

    இந்த நிலையில் ஒலிம்பிக் கிராமத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பெண்ணிடம் ஜோன்ஸ் தவறாக நடக்க முயன்றார். இதுதொடர்பாக அந்த பெண் போலீசில் புகார் கொடுத்தார்.

    பாலியல் குற்றச்சாட்டில் நமீபியா குத்துச்சண்டை வீரர் ஜோன்சை பிரேசில் போலீசார் கைது செய்தனர்.

    ஒலிம்பிக் கிராமத்தில் இதுபோன்ற பாலியல் புகார் கூறப்படுவது 2-வது முறையாகும். ஏற்கனவே இதே குற்றச்சாட்டில் மொராக்கோ குத்துச்சண்டை வீரர் கைதாகி இருந்தார்.
    Next Story
    ×