என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கி சுடுதல்: அபினவ் பிந்த்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி
    X

    துப்பாக்கி சுடுதல்: அபினவ் பிந்த்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி

    இந்தியாவின் முன்னணி துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் 7-வது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
    ரியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் அபினவ் பிந்த்ரா, ககன் நரங் ஆகியோர் உள்பட 50 பேர் கலந்து கொண்டனர்.

    6 சுற்றுகள் கொண்ட இதில் அபினவ் பிந்த்ரா 625.7 புள்ளிகளுடன் 7-வது இடத்தைப் பிடித்தார். முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்கள் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்பதால் அபினவ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    இத்தாலி வீரர் நிக்கோலா சம்ப்ரியானி 630.2 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். அத்துடன் ஒலிம்பிக் சாதனையையும் பதிவு செய்தார்.

    ரஷிய வீரர் 629 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், குரோஷிய வீரர் 628 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும், உக்ரைன் வீரர் 627 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும், 626.2 புள்ளிகளுடன் மற்றொரு உக்ரைன் வீரர் 5-வது இடத்தையும், ஹங்கேரி வீரர் 625.9 புள்ளிகளுடன் 6-வது இடத்தையும், பல்கேரிய வீரர் 625.5 புள்ளிகளுடன் 8-வது இடத்தையும் பிடித்தனர்.

    ககன் நரங் 621.7 புள்ளிகளுடன் 23-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார். இறுதிப் போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணி அளவில் நடைபெற இருக்கிறது.
    Next Story
    ×