என் மலர்
செய்திகள்

வில்வித்தை: இந்திய பெண்கள் அணி காலிறுதிக்கு தகுதி - ரஷியாவுடன் பலப்பரீட்சை
அணிகளுக்கு இடையிலான வில்வித்தை போட்டியில் இந்திய பெண்கள் அணி கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
அணிக்கான வில்வித்தை போட்டியில் இந்திய அணி கொலம்பியாவை சந்தித்தது. இந்திய அணியில் லட்சுமிராணி மஹி, பம்பைலா தேவி, தீபிகா குமாரி ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.
முதல் செட்டில் இந்தியா 52-51 என முன்னிலை பெற்றது. இதனால் இந்திய அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. 2-வது செட்டில் இந்தியா 49-50 என தோல்வி அடைந்தது. இதனால் கொலம்பியா அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. 3-வது செடடில் இந்தியா- கொலம்பியா 2-2 என சமநிலை புள்ளிகள் பெற்றது. இதனால் தலா ஒரு புள்ளிகள் கொடுக்கப்பட்டது.
மூன்று சுற்றுகள் முடிவில் இந்தியா- கொலம்பியா 3-3 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. 4-வது சுற்றில் இந்தியா 52 புள்ளிகளும், கொலம்பியா 44 புள்ளிகளும் பெற்றதால் இந்தியா 5-3 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
காலிறுதியில் வலிமையான ரஷிய அணியை எதிர்கொள்கிறது.
முதல் செட்டில் இந்தியா 52-51 என முன்னிலை பெற்றது. இதனால் இந்திய அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. 2-வது செட்டில் இந்தியா 49-50 என தோல்வி அடைந்தது. இதனால் கொலம்பியா அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. 3-வது செடடில் இந்தியா- கொலம்பியா 2-2 என சமநிலை புள்ளிகள் பெற்றது. இதனால் தலா ஒரு புள்ளிகள் கொடுக்கப்பட்டது.
மூன்று சுற்றுகள் முடிவில் இந்தியா- கொலம்பியா 3-3 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. 4-வது சுற்றில் இந்தியா 52 புள்ளிகளும், கொலம்பியா 44 புள்ளிகளும் பெற்றதால் இந்தியா 5-3 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
காலிறுதியில் வலிமையான ரஷிய அணியை எதிர்கொள்கிறது.
Next Story






