என் மலர்
செய்திகள்

ரியோ ஒலிம்பிக் கிராமத்தில் பணிப்பெண்களைக் கற்பழிக்க முயன்ற குத்துச்சண்டை வீரர் கைது
பிரேசில் தலைநகர் ரியோவில் ஒலிம்பிக் விளையாட்டு இன்று தொடங்க உள்ள நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் பனிப்பெண்களைக் கற்பழிக்க முயன்ற வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரேசில் தலைநகர் ரியோவில் ஒலிம்பிக் தொடர் இன்று தொடங்குகிறது. தொடர்ச்சியாக 21-ந்தேதி வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான வீரர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து பிரேசில் வந்துள்ளனர். இவர்கள் தங்குவதற்காக ஒலிம்பிக் கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நகரில் அந்தந்த நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளில் வீரர்கள் தங்கியிருந்தனர். அங்கு பனிப்பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் மொராக்கோ நாட்டின் 22 வயதான குத்துச் சண்டை வீரர் ஹசன் சாடா இரண்டு பனிப்பெண்களை கற்பழிக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் அவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளனர்.
ஆனால், இரண்டு பெண்களையும் வீரர் தாக்கியதால் போலீசாரால் பிடிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று மற்றொரு செய்தி கூறுகிறது. ரியோ ஒலிம்பிக் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, ரியோ ஒலிம்பிக் கிராமத்தில் போதுமான வசதி செய்து தரப்படவில்லை என்று வீரர்களின் குற்றச்சாட்டும் தொடர்கிறது.
இந்த நகரில் அந்தந்த நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளில் வீரர்கள் தங்கியிருந்தனர். அங்கு பனிப்பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் மொராக்கோ நாட்டின் 22 வயதான குத்துச் சண்டை வீரர் ஹசன் சாடா இரண்டு பனிப்பெண்களை கற்பழிக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் அவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளனர்.
ஆனால், இரண்டு பெண்களையும் வீரர் தாக்கியதால் போலீசாரால் பிடிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று மற்றொரு செய்தி கூறுகிறது. ரியோ ஒலிம்பிக் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, ரியோ ஒலிம்பிக் கிராமத்தில் போதுமான வசதி செய்து தரப்படவில்லை என்று வீரர்களின் குற்றச்சாட்டும் தொடர்கிறது.
Next Story






