என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது
    X

    கடலூரில் மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது

    கடலூர் மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு கடலூரில் வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது.
    கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் கூத்தரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் கடலூர் மாவட்ட 14 வயது மற்றும் 16 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு வருகிற 16-ந் தேதி(சனிக்கிழமை) கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் சங்க தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடக்கிறது. 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு அன்று காலை 8 மணிக்கும், 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 2 மணிக்கும் நடைபெற உள்ளது.

    இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள 14 வயதுக்குட்பட்டவர்கள் 1.9.2002 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்திருக்க வேண்டும். 16 வயதுக்குட்பட்டவர்கள் 1.9.2000 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்திருக்க வேண்டும்.

    இதேபோல் 19 வயது மற்றும் 23 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு வருகிற 17-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு அன்று காலை 8 மணிக்கும், 23 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 2 மணிக்கும் நடைபெற உள்ளது.

    இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள 19 வயதுக்குட்பட்டவர்கள் 1.9.1997 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்திருக்க வேண்டும். 23 வயதுக்குட்பட்டவர்கள் 1.9.1993 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்திருக்க வேண்டும்.

    இந்த தேர்வில் கலந்து கொள்ள வரும் வீரர்கள் 2 புகைப்படம் மற்றும் பிறப்புசான்றிதழ் கொண்டு வர வேண்டும். வீரர்கள் வெள்ளை நிற சட்டை மற்றும் வெள்ளை நிற பேண்ட் அணிந்து வரவேண்டும். கிரிக்கெட் வீரர்கள் கடலூர் மாவட்டத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் அல்லது கடலூர் மாவட்டத்தில் படிப்பவர்களாக இருக்க வேண்டும். இந்த தேர்வில் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவரது செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×