என் மலர்
புதுச்சேரி

முத்தியால்பேட்டையில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்
- நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
- குருசுகுப்பம், மாணிக்க முதலியார் தோட்டம், தெபேசன்பேட்ஆகிய பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை காட்டாமணிக்குப்பம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை (புதன்கிழமை) குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
நாளை மதியம் 12 மணி முதல் 2 மணி வரை, முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள சோலை நகர், கணேஷ் நகர், அங்காளம்மன் நகர், மஞ்சினி நகர், வ.உ.சி. நகர், வைத்திக்குப்பம், குருசுகுப்பம், மாணிக்க முதலியார் தோட்டம், தெபேசன்பேட், விஸ்வநாதன் நகர் ஆகிய பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Next Story






