என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகளை இரவில் நடுரோட்டில் வைத்து வெளியிட்ட கல்வித்துறை- புதுச்சேரியில் வினோதம்
    X

    சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகளை இரவில் நடுரோட்டில் வைத்து வெளியிட்ட கல்வித்துறை- புதுச்சேரியில் வினோதம்

    • மாநிலத்தின் தேர்ச்சி சதவீத விபரத்தை தொகுத்து மாலை வெளியிடுவதாக கல்வித்துறை கூறியது.
    • இரவு 7.40 மணிக்கு நடுரோட்டில் வைத்து தேர்வு முடிவுகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு பள்ளிகள் கடந்த 2024-25-ம் கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாற்றப்பட்டது.

    இதனால் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் முதல் முறையாக பொதுத்தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகளை பெற்றோர் உட்பட அனைத்து தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நேற்று காலை அடுத்தடுத்து பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகளை வெளியிட்டது.

    தேர்வு முடிவுகளை மாணவர்கள் தனிப்பட்ட முறையில் தெரிந்து கொண்டனர். அதே வேளையில் மாநிலத்தின் தேர்ச்சி சதவீத விபரத்தை தொகுத்து மாலை வெளியிடுவதாக கல்வித்துறை கூறியது. நீண்ட இழுபறிக்கு பின் இந்திரா நகர் அரசு கல்லூரி ஆண்டு விழா முடித்துவிட்டு வெளியே வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் தேர்வு முடிவுகளை கல்வித்துறை அதிகாரிகள் வழங்கினர்.

    இதனையடுத்து இரவு 7.40 மணிக்கு நடுரோட்டில் வைத்து தேர்வு முடிவுகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார். பல்வேறு தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்த சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவை 8 மணி நேரத்துக்கு பிறகு இரவில், அதுவும் நடுரோட்டில் வைத்து வெளியிட்ட சம்பவம் கல்விதுறையின் செயல்பாட்டை கேள்விகுறியாக்கி உள்ளது.

    Next Story
    ×