என் மலர்
புதுச்சேரி

புதுவை சட்டசபையில் ரூ.5,396 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்: முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்
- புதிய அரசு 2026-27ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.
- ஒட்டுமொத்தமாக அனைத்து துறைகளுக்கும் சேர்த்து ரூ.537 கோடியே 38 லட்சத்துக்கு கூடுதல் செலவினங்களுக்கு சபையின் ஒப்புதல் கோரப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.
தேர்தல் நடைபெற உள்ளதால் வரும் நிதி ஆண்டான 2026-27க்கு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கு பதிலாக அரசின் செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்காக புதுவை சட்டசபை இன்று கூடியது. சபையில் நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 5 மாதங்களுக்கு ரூ.5 ஆயிரத்து 396 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
சபாநாயகர் குரல் வாக்கெடுப்பு மூலம் இடைக்கால பட்ஜெட்டுக்கு சபையின் ஒப்புதல் பெற்றார். சட்டசபை தேர்தலுக்கு பின் புதிய அரசு அமையும். புதிய அரசு 2026-27ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.
புதுவை சட்டசபையில் 2025-26ம் நிதி ஆண்டிற்கான அரசின் பல்வேறு துறைகளின் கூடுதல் செலவு அறிக்கையை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் துணை கொடையாக கோரினர். ஒட்டுமொத்தமாக அனைத்து துறைகளுக்கும் சேர்த்து ரூ.537 கோடியே 38 லட்சத்துக்கு கூடுதல் செலவினங்களுக்கு சபையின் ஒப்புதல் கோரப்பட்டது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குரல் வாக்கெடுப்பு நடத்தி இந்த கூடுதல் செலவினங்களுக்கு ஒப்புதல் பெற்றார்.






