search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆசிரியர் பணி நியமன மோசடி- மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் இளைஞர் பிரிவு தலைவர் கைது
    X

    ஆசிரியர் பணி நியமன மோசடி- மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் இளைஞர் பிரிவு தலைவர் கைது

    • அர்பிதா வீடுகளில் நடந்த சோதனையின்போது ஏராளமான தங்க நகைகள் மற்றும் கோடிக்கணக்கான ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    • குந்தன் கோஷ் பலரிடம் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி கொண்டு ஏமாற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த ஆசிரியர் பணி நியமன மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சமீபத்தில் முன்னாள் கல்வி மந்திரி பார்த்தா சட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அர்பிதா வீடுகளில் நடந்த சோதனையின் போது ஏராளமான தங்க நகைகள் மற்றும் கோடிக்கணக்கான ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக மேற்கு வங்காள மாநில திரிணாமுல் காங்கிரஸ் இளைஞர் பிரிவு தலைவர் குந்தன் கோஷ் பலரிடம் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி கொண்டு ஏமாற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

    இதையடுத்து அவருக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்நிலையில் இன்று குந்தன்கோஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×