search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஐ.நா. சபை பொதுச் செயலாளர் இந்தியா வந்தடைந்தார்
    X

    இந்தியா வந்த அன்டோனியோ குட்டரெஸ்

    ஐ.நா. சபை பொதுச் செயலாளர் இந்தியா வந்தடைந்தார்

    • ஐ.நா.சபை பொதுச் செயலாளராக அன்டோனியோ குட்டரெஸ் 2-வது முறை தேர்வானார்.
    • இவர் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார்.

    புதுடெல்லி:

    ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டரெஸ் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார்.

    போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர், கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. சபை பொதுச் செயலாளராக பதவியேற்றார். தொடர்ந்து ஜனவரி 1, 2022ம் ஆண்டு முதல் இரண்டாவது முறையாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்தியா வந்துள்ள ஐ.நா.சபை பொது செயலாளர் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்திக்க உள்ளார்.

    Next Story
    ×