search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சர்வதேச யோகா தினம்: தமிழக கவர்னர், மத்திய அமைச்சர்கள் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பு
    X

    சர்வதேச யோகா தினம்: தமிழக கவர்னர், மத்திய அமைச்சர்கள் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பு

    • யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி
    • மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஐ.என்.ஸ். விக்ராந்த் கப்பலில் அதிகாரிகளுடன் யோகா செய்தார்

    சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 9-வது சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்த யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யோகா செய்தார்.

    அதேபோல் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், ஸ்மிரிதி இரானி, ராஜ்நாத் சிங், அனுராக் தாகூர் ஆகியோர் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யோகா செய்தனர்.

    உத்தரகாண்டில் யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், உத்தரகாண்ட் முதலமைச்சர் கலந்து கொண்டார்.

    ராணுவ வீரர்களும் லடாக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் யோகா செய்து சர்வதேச யோகா தினத்தை கொண்டாடினர்.

    Next Story
    ×