search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதியில் ரூ.3.69 கோடி உண்டியல் வசூல்
    X

    திருப்பதியில் ரூ.3.69 கோடி உண்டியல் வசூல்

    • திருப்பதி கோவிலில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
    • திருப்பதியில் நேற்று 64,512 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வர விடுமுறை நாள் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    இந்த நிலையில் திருப்பதியில் நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் படிப்படியாக குறைந்தது. கணிசமாக பக்தர்கள் கூட்டம் குறைந்ததால் பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 64,512 பேர் தரிசனம் செய்தனர். 23,491 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.69 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    Next Story
    ×