என் மலர்
இந்தியா

திருப்பதியில் ரூ.3.69 கோடி உண்டியல் வசூல்
- திருப்பதி கோவிலில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
- திருப்பதியில் நேற்று 64,512 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வர விடுமுறை நாள் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில் திருப்பதியில் நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் படிப்படியாக குறைந்தது. கணிசமாக பக்தர்கள் கூட்டம் குறைந்ததால் பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 64,512 பேர் தரிசனம் செய்தனர். 23,491 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.69 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
Next Story






