search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதியில் 5-ந்தேதி முதல் கோவிலுக்கு வெளியே புதிய கட்டிடத்தில் உண்டியல் எண்ணும் பணி தொடக்கம்
    X

    திருப்பதியில் 5-ந்தேதி முதல் கோவிலுக்கு வெளியே புதிய கட்டிடத்தில் உண்டியல் எண்ணும் பணி தொடக்கம்

    • திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.3 முதல் 5 கோடி வரை உண்டியலில் காணிக்கையாக வசூலாகிறது.
    • உண்டியல் காணிக்கை எண்ணும் இடத்தில் இட பற்றாக்குறை உள்ளதால் புதிய கட்டிடம் கட்ட தேவஸ்தானம் முடிவு செய்தது.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்களின் பிரார்த்தனையை நிறைவேற்றும் வகையாக அங்குள்ள உண்டியலில் தங்கம், வெள்ளி நகைகள், பணம் மற்றும் வெளிநாட்டு கரன்சி உள்ளிட்டவைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

    இதனால் தினமும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.3 முதல் 5 கோடி வரை உண்டியலில் காணிக்கையாக வசூலாகிறது.

    ஆண்டுக்கு ரூ.1000 கோடி முதல் 1200 கோடி வரை கிடைக்கிறது. மேலும் ஒரு டன் எடையுள்ள தங்க நகைகள் காணிக்கையாக கிடைக்கின்றன.

    உண்டியலில் காணிக்கையாக வசூலாகும் சில்லரை நாணயங்கள், பணத்தை கோவிலுக்குள் உள்ள இடத்தில் தேவஸ்தான ஊழியர்கள் எண்ணி வருகின்றனர்.

    உண்டியல் காணிக்கை எண்ணும் இடத்தில் இட பற்றாக்குறை உள்ளதால் புதிய கட்டிடம் கட்ட தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி பெங்களூருவை சேர்ந்த பக்தர் ஒருவர் நிதி உதவியுடன் கோவிலில் இருந்து 250 மீட்டர் தொலைவில் ரூ.23 கோடியில் புதிய பரகாமணி கட்டிடம் கட்டப்பட்டது. புதிய கட்டிடத்தை கடந்த பிரமோற்சவத்தின்போது திருமலைக்கு வந்த முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திறந்து வைத்தார். ஏழுமலையான் கோவிலில் இருந்து உண்டியலை கிரேன் மூலம் எடுத்துச் சென்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட உள்ளது.

    உண்டியலை எடுத்துச் செல்லும் கிரேன் மற்றும் எந்திரங்கள் பொருத்தும் பணி நிறைவடைந்ததால் வரும் 5-ந் தேதி புதிய கட்டிடத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உலகிலேயே பணக்கார கோவிலான திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதன்முறையாக கோவிலுக்கு வெளியே உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கப்பட உள்ளது.

    Next Story
    ×