search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதியில் பக்தர்கள் தரிசன அறை முன்பணம் திரும்ப கிடைப்பதில் குளறுபடி
    X

    திருப்பதியில் பக்தர்கள் தரிசன அறை முன்பணம் திரும்ப கிடைப்பதில் குளறுபடி

    • ஆன்லைன் மூலம் அறை வாடகை எடுக்கும் பக்தர்கள் வாடகையை விட 2 மடங்கு கூடுதலாக முன்பணம் செலுத்துகின்றனர்.
    • அறையை காலி செய்தவுடன் பக்தர்களின் வங்கிக்கணக்கிற்கு தேவஸ்தானம் சார்பில் கூடுதலாக பெறப்பட்ட முன்பணம் திருப்பி அனுப்பப்படுகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான அறைகள் வாடகைக்கு விடப்படுகிறது.

    ஆன்லைன் மூலம் அறை வாடகை எடுக்கும் பக்தர்கள் வாடகையை விட 2 மடங்கு கூடுதலாக முன்பணம் செலுத்துகின்றனர். இதற்கு முன்பு அறையில் தங்கி இருந்த பக்தர்கள் அறையை காலி செய்யும்போது பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட முன்பணம் உடனடியாக பக்தர்களிடம் வழங்கப்பட்டு வந்தது.

    தற்போது ஆன்லைன் மூலம் பக்தர்களிடம் இருந்து பெறப்படும் முன்பணம் பக்தர்கள் தங்கியிருந்த அறைகளை காலி செய்து 30 நாட்களாகியும் திருப்பி தரவில்லை என ஏராளமான பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு புகார் தெரிவித்தனர்.

    அறையை காலி செய்தவுடன் பக்தர்களின் வங்கிக்கணக்கிற்கு தேவஸ்தானம் சார்பில் கூடுதலாக பெறப்பட்ட முன்பணம் திருப்பி அனுப்பப்படுகிறது.

    ஆனால் வங்கிகள் பணத்தை உடனடியாக அனுப்பாமல் தாமதம் செய்து வருவதாகவும், விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தனர்.

    Next Story
    ×