search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தொடர்ந்து 7வது முறை- தூய்மையான நகரங்களில் முதலிடம் பிடித்தது இந்தூர்
    X

    தொடர்ந்து 7வது முறை- தூய்மையான நகரங்களில் முதலிடம் பிடித்தது இந்தூர்

    • நவி மும்பை மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
    • 'சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள்' பிரிவில், மகாராஷ்டிரா முதலிடம்.

    மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தூய்மைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது.

    இதில், இந்தூர் மற்றும் சூரத் நாட்டின் தூய்மையான நகரங்களாகத் தேர்வு செய்யப்பட்டன. தொடர்ந்து, நவி மும்பை மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.

    'ஸ்வச் சர்வேக்ஷன் விருதுகள் 2023' இல் 'சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள்' பிரிவில், மகாராஷ்டிரா முதலிடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளது.

    இதுதொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    இந்தூர் தொடர்ந்து ஏழாவது முறையாக தூய்மையான நகர பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×