என் மலர்tooltip icon

    இந்தியா

    அசன்சோல் இடைத்தேர்தல் -  பா.ஜ.க, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மோதலால் பரபரப்பு
    X

    பாஜக - திரிணாமுல் மோதல்

    அசன்சோல் இடைத்தேர்தல் - பா.ஜ.க, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மோதலால் பரபரப்பு

    • மேற்கு வங்காளம் மாநிலம் அசன்சோல் பகுதியில் இன்று இடைத்தேர்தல் நடந்தது.
    • அப்போது பா.ஜ.க. மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் வெடித்தது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலம் அசன்சோல் பகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

    அசன்சோல் நகராட்சியில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வாக்குச்சாவடிக்குள் பா.ஜ.க. ஆதரவாளர்களும், திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்களும் மோதிக்கொண்டனர்.

    வாக்காளர்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் திசைதிருப்ப முயற்சி செய்வதாகவும், தங்களை தாக்கியதாகவும் பா.ஜ.க. எம்.எல்.ஏ லட்சுமண் குற்றம் சாட்டினார்.

    இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் சிலரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×