search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகார் முன்னாள் பிரதமர் தேஜஸ்வி யாதவ் 10 நாள் யாத்திரை
    X

    பீகார் முன்னாள் பிரதமர் தேஜஸ்வி யாதவ் 10 நாள் யாத்திரை

    • 10 நாள் யாத்திரையில் 38 மாவட்டங்களில் ஆதரவு திரட்ட அவர் திட்டமிட்டுள்ளார்.
    • 32 பொதுக்கூட்டங்களிலும் அவர் பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் தயாராகி வருகிறது. இரு கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு இன்னமும் முடிவடையாத நிலையில் லாலு பிரசாத் யாதவின் மகனும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் பீகார் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளார்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். 10 நாட்கள் நடக்கும் அவரது யாத்திரை 29-ந்தேதி நிறைவு பெற உள்ளது. இந்த 10 நாள் யாத்திரையில் 38 மாவட்டங்களில் ஆதரவு திரட்ட அவர் திட்டமிட்டுள்ளார். 32 பொதுக்கூட்டங்களிலும் அவர் பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×