search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருட்டு வழக்கில் ஜெயிலுக்கு சென்றதால் அவமானம்- 2 மகள்களை கொன்று தொழிலாளி தற்கொலை
    X

    திருட்டு வழக்கில் ஜெயிலுக்கு சென்றதால் அவமானம்- 2 மகள்களை கொன்று தொழிலாளி தற்கொலை

    • மகன் தன்னிடம் பேசாமல் சோகமாக சென்றதால் சந்தேகம் அடைந்த தாய் மகன் வீட்டிற்கு சென்று பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
    • பலமுறை குரல் கொடுத்தும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து அவசர போலீஸ் 100-க்கு போன் செய்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கஞ்சார பாலம் மெட்டு பகுதியை சேர்ந்தவர் துர்கா ஆஞ்சநேய பிரசாத் (வயது 42). இவர் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பர் வேலை செய்து வந்தார். இவரது மனைவி நாகமணி. தம்பதிக்கு பிந்து (15), பார்கவி (13) என்ற 2 மகன்கள் இருந்தனர். நாகமணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 2013-ம் ஆண்டு இறந்தார். இதனால் தனது மகள்களை துர்கா ஆஞ்சநேய பிரசாத் வளர்த்து வந்தார்.

    இந்த நிலையில் துர்கா ஆஞ்சநேய பிரசாத்தை போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். நேற்று முன்தினம் ஜெயிலிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த துர்கா ஆஞ்சநேய பிரசாத் திருட்டு வழக்கில் சிறைக்கு சென்று வந்ததால் விரக்தி அடைந்து சோகத்துடன் காணப்பட்டார். நேற்று காலை தனது தாய் வீட்டிற்கு சென்ற துர்கா ஆஞ்சநேயர் பிரசாத் தாயிடம் டீ வாங்கி குடித்தார். தாயிடம் எதுவும் பேசாமல் சோகமாக வீட்டிற்கு திரும்பினார்.

    மகன் தன்னிடம் பேசாமல் சோகமாக சென்றதால் சந்தேகம் அடைந்து மகன் வீட்டிற்கு சென்று பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. பலமுறை குரல் கொடுத்தும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து அவசர போலீஸ் 100-க்கு போன் செய்தார்.

    போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது துர்கா ஆஞ்சநேயர் பிரசாத் ஒரு அறையில் மின்விசிறியில் தூக்கில் பணமாக தொங்கினார். அவரது 2 மகள்கள் மற்றொரு அறையில் பலமாக தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய் கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த விசாகப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு வழக்கில் ஜெயிலுக்கு சென்றதால் அவமானம் அடைந்து 2 மகள்களை கொலை செய்து விட்டு தந்தையும் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×