search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மக்களுக்கான நல வாரியத்தில் ரூ.65 லட்சம் மோசடி- பெண் ஊழியர் கைது
    X

    வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மக்களுக்கான நல வாரியத்தில் ரூ.65 லட்சம் மோசடி- பெண் ஊழியர் கைது

    • வாரிய உறுப்பினர்களின் கடவு சொற்களை தெரிந்து கொண்டு அதனை பயன்படுத்தி ரூ.65 லட்சம் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
    • முறைகேட்டில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மக்களின் நலனுக்காக பிரவாசி நல வாரியம் செயல்பட்டு வருகிறது.

    இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளோருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் முறைகேடு நடப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

    இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் வாரியத்தில் உறுப்பினர் அல்லாதோரின் பெயர்களை சேர்த்து போலி கணக்கு தொடங்கி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

    இந்த முறைகேட்டில் அலுவலக பெண் ஊழியர் லீனா என்பவர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் வாரிய உறுப்பினர்களின் கடவு சொற்களை தெரிந்து கொண்டு அதனை பயன்படுத்தி ரூ.65 லட்சம் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இந்த முறைகேட்டில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×