search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோழிக்கோட்டில் 12-வது மாடியில் இருந்து குதித்து பெண் டாக்டர் தற்கொலை
    X

    கோழிக்கோட்டில் 12-வது மாடியில் இருந்து குதித்து பெண் டாக்டர் தற்கொலை

    • கோழிக்கோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சதா ரஹ்மத் பங்கேற்க வந்தார்.
    • அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடியில் நடந்த விழாவில் பங்கேற்ற போது திடீரென அலறல் சத்தம் கேட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் சதா ரஹ்மத்.

    சதா ரஹ்மத் அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று அவர் கோழிக்கோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்தார்.

    அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடியில் நடந்த விழாவில் பங்கேற்ற போது திடீரென அங்கிருந்து அலறல் சத்தம் கேட்டது.

    உடனே குடியிருப்பு பாதுகாப்பு ஊழியர்கள் அங்கு ஓடி சென்றனர். அப்போது இளம்பெண் டாக்டர் சதா ரஹ்மத் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவர் 12-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இதுபற்றி வெள்ளாயில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெண் டாக்டர் சதா ரஹ்மத் தற்கொலை செய்தது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×