search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கனமழையால் இமாச்சல பிரதேசத்தில் ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு: முதல்-மந்திரி தகவல்
    X

    கனமழையால் இமாச்சல பிரதேசத்தில் ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு: முதல்-மந்திரி தகவல்

    • மத்திய அரசின் இடைக்கால நிவாரணம் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
    • மாநிலத்தின் உள் கட்டமைப்பை மீண்டும் மேம்படுத்த ஒரு ஆண்டு ஆகும்.

    சிம்லா:

    இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர்சிங் சுகு கூறியதாவது:-

    நான் கங்க்ரா செல்லும் வழியில் இருக்கிறேன். நிலச்சரிவால் அங்கு 650-க்கும் மேற்பட்டோரை வெளியேற்றியுள்ளோம். சுமார் 100 பேர் கங்க்ராவில் இன்னும் சிக்கியுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையால் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் இதற்கு முன்பு இது போன்ற பேரழிவு ஏற்பட்டது இல்லை.

    மத்திய அரசின் இடைக்கால நிவாரணம் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். மாநிலத்தின் உள் கட்டமைப்பை மீண்டும் மேம்படுத்த ஒரு ஆண்டு ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×