search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறையில் அடைக்கப்பட்ட சேவல்
    X

    சிறையில் அடைக்கப்பட்ட சேவல்

    • சிறுவன் சேவலை திருடி செல்வதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் சிறுவனையும், சேவலையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
    • சிறுவனுக்கு 18 வயது நிரம்பாத நிலையில், அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து ஒப்படைக்கப்பட்டான்.

    தெலுங்கானா மாநிலம் மகபூப நகர் மாவட்டத்தில் உள்ள பூரெட்டி பள்ளி கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுவன் சேவல் ஒன்றை கையில் பிடித்து சென்றான். அந்த சிறுவன் சேவலை திருடி செல்வதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் சிறுவனையும், சேவலையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    சிறுவனுக்கு 18 வயது நிரம்பாத நிலையில், அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து ஒப்படைக்கப்பட்டான். அதே நேரம் அந்த சேவல் யாருடையது என தெரியாததால் போலீசார் அதை பாதுகாப்பதற்காக முடிவு செய்து சேவலை போலீஸ் நிலைய சிறையிலேயே அடைத்து வைத்து அதற்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் தண்ணீர் வைக்க ஏற்பாடு செய்தனர்.

    இந்த செய்தி அப்பகுதியில் பரவ தொடங்கியதும் மக்கள் பலரும் போலீஸ் நிலையம் சென்று சிறையில் இருக்கும் சேவலை பார்த்து வருகிறார்கள்.

    Next Story
    ×