search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரூ.366 கோடி ஜி.எஸ்.டி. மோசடி செய்ததாக தெரு வியாபாரி மீது வழக்கு
    X

    ரூ.366 கோடி ஜி.எஸ்.டி. மோசடி செய்ததாக தெரு வியாபாரி மீது வழக்கு

    • ஒருவர் தனது பெயரில் இந்த மோசடி செய்துள்ளதாகவும், இந்த மோசடியின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளியை ஜி.எஸ்.டி. துறை கண்டுபிடிக்க வேண்டும்.
    • பல நிறுவனங்கள் மற்றும் சில நபர்கள் எங்கள் கண்காணிப்பில் உள்ளனர் என்றார்.

    உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் உள்ள தெருக்களில் துணிகளை விற்பனை செய்பவர் இஜாஸ் அகமது. 40 வயதான இவர் நாள் ஒன்றுக்கு ரூ.500 சம்பாதித்துள்ளார். இந்த நிலையில் ரூ.366 கோடி ஜி.எஸ்.டி. மோசடி செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டு கூறப்பட்டு வழக்கு பதிவாகி உள்ளது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    வேறு ஒருவர் தனது பெயரில் இந்த மோசடி செய்துள்ளதாகவும், இந்த மோசடியின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளியை ஜி.எஸ்.டி. துறை கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஜி.எஸ்.டி. அதிகாரி கூறும் போது, ரூ.300 கோடிக்கு மேல் பில்கள் வழங்கப்பட்டுள்ளன. இது மிகப் பெரிய மோசடியாக தெரிகிறது. முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பல நிறுவனங்கள் மற்றும் சில நபர்கள் எங்கள் கண்காணிப்பில் உள்ளனர் என்றார்.

    Next Story
    ×