பூஜா பம்பர் லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு பெற்றவர் அடையாளத்தை வெளியிட மறுப்பு

அதிர்ஷ்டசாலி பெயரை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமும் தெரிந்து கொள்ள முடியாது. லாட்டரியில் பரிசு விழும் நபரின் பெயரை வெளியிட வேண்டும் என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூஜா பம்பர் லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு பெற்றவர் அடையாளத்தை வெளியிட மறுப்பு
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் அரசே லாட்டரி விற்பனை செய்கிறது.

கேரள லாட்டரியின் பூஜா பம்பர் குலுக்கல் சமீபத்தில் நடந்தது. இதில் முதல் பரிசான ரூ.10 கோடி திருச்சூரில் உள்ள லாட்டரி சீட்டு விற்பனை நிலையத்தில் இருந்து விற்பனையான சீட்டுக்கு கிடைத்தது.

இதையடுத்து ரூ.10 கோடி பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலியை தேடும் பணியில் கேரள லாட்டரி துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

பரிசு விழுந்த பல நாட்கள் ஆகியும் அதிர்ஷ்டசாலியின் பெயர் விபரங்கள் வெளியாகவில்லை. எனவே இதுபற்றிய தகவல்களை அறிந்து கொள்ள பல்வேறு தரப்பினரும் கேரள லாட்டரி துறை அதிகாரிகளையும், லாட்டரி சீட்டு விற்பனை நிலையத்தினரையும் தொடர்பு கொண்டு கேட்டனர்.

அதற்கு அவர்கள் பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி தனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று கூறிவிட்டார் என்றனர்.

இதற்கான காரணம் என்ன? என்று கேட்டபோது, ஏற்கனவே ஓணம் பம்பர் குலுக்கலில் முதல் பரிசு பெற்ற ஆட்டோ டிரைவரிடம், பண உதவி கேட்டு பலரும் நச்சரிக்க தொடங்கினர்.

இதனால் மனம் உடைந்த அவர், லாட்டரியில் எனக்கு பரிசு விழாமலேயே இருந்திருக்கலாம் என மனம் நொந்து கூறினார். இதுபோன்ற நிலை தனக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இப்போது ரூ.10 கோடி பரிசு விழுந்த நபர் தனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் எனக்கூறியுள்ளார், என்றனர்.

அதிர்ஷ்டசாலி பெயரை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமும் தெரிந்து கொள்ள முடியாது. லாட்டரியில் பரிசு விழும் நபரின் பெயரை வெளியிட வேண்டும் என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com