search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பஞ்சாப் அமைச்சர் பவுஜா சிங் சராரி ராஜினாமா
    X

    ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பஞ்சாப் அமைச்சர் பவுஜா சிங் சராரி ராஜினாமா

    • ஆம் ஆத்மி கட்சி அவருக்கு இரண்டு காரணங்களுக்காக நோட்டீஸ் அனுப்பியது.
    • ராஜினாமாவுக்குப் பிறகு, பஞ்சாப் அமைச்சரவையில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

    பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஊழலுக்கு எதிராக செயல்படும் அமைச்சர்கள் மீது ஆம் ஆத்மி நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தோட்டக்கலைத்துறை அமைச்சர் பவுஜா சிங் சராரி இன்று ராஜினாமா செய்துள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பவுஜா சிங் பேசிய ஆடியோ ஒன்று வைரலானது. அப்போது அதில், பணம் கையாடல் தொடர்பாக பேசும் வகையில் பதிவாகி இருந்தது.

    இந்த ஆடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி அவருக்கு இரண்டு காரணங்களுக்காக நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், அமைச்சர் பவுஜா சிங் சராரி ராஜினாமா செய்துள்ளார்.

    இந்த ராஜினாமாவுக்குப் பிறகு, பஞ்சாப் அமைச்சரவையில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×