என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
டெல்லியில் பயங்கரவாதி கைது
- உலக அளவிலான பயங்கரவாத குழுக்களில் சேர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுடெல்லி:
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் முக்கிய பயங்கரவாதி அராபத் அலி என்பவரை டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கென்யாவின் நைரோபியில் இருந்து டெல்லி திரும்பிய அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இவர் 2020-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்தார். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு குறித்து பிரசாரம் செய்ததாகவும், பயங்கரவாத செயல்களுக்கு சதி செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநில சிவமொக்கா மாவட்டத்தை சேர்ந்த இவர் அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதிகளாக மாற்றி, உலக அளவிலான பயங்கரவாத குழுக்களில் சேர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன் அராபத் அலிக்கு தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்