என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
திருடப்பட்ட அடையாள அட்டை மூலம் 36 ஆண்டுகள் அரசு வேலை பார்த்த தொழிலாளி
- நரசிங் தேவாங்கன் திருடப்பட்ட அடையாள அட்டையை பயன்படுத்தி மோசடி செய்து அரசு வேலையில் சேர்ந்தது தெரியவந்துள்ளது.
- திருடப்பட்ட அடையாள அட்டையின் மூலம் 36 ஆண்டுகள் அரசு பணியாற்றி உள்ளார்.
போபால்:
மத்திய பிரேதச மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் அனுப்புர் மாவட்டத்தில் ஏராளமான நிலக்கரி வயல்கள் உள்ளன. இதில் 1984-ம் ஆண்டு நரசிங் தேவாங்கன் என்பவர் தனக்கு அறிமுகமான தாதாய்ராம் என்பவரது அடையாள அட்டையை திருடி அதன் மூலம் அரசு வேலைக்கு விண்ணப்பித்துள்ளார்.
அதன்படி நரசிங் தேவாங்கனுக்கு அரசு வேலையும் கிடைத்தது. அவர் தொடர்ந்து 36 ஆண்டுகளாக 2020-ம் ஆண்டு வரை அரசு பணியாற்றி இறந்தார்.
இந்நிலையில் மரணத்திற்கு பிறகு கருணைத்தொகை மற்றும் இதர பலன்களை பெறுவதற்காக அவரது மனைவி அகில்யாபாய் தேவாங்கன் விண்ணப்பித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தாதாய்ராமின் மனைவி என கூறி வங்கி கணக்கு தொடங்குவதற்காக சென்றார். அப்போதுதான் நரசிங் தேவாங்கன் திருடப்பட்ட அடையாள அட்டையை பயன்படுத்தி மோசடி செய்து அரசு வேலையில் சேர்ந்தது தெரியவந்துள்ளது. ஆனாலும் அந்த அட்டையின் மூலம் அவர் 36 ஆண்டுகள் அரசு பணியாற்றி உள்ளார்.
இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தாதாய்ராம் தற்போது கல்யாண்பூர் கிராமத்தில் வசித்து வருவது தெரியவந்தது. 75 வயதான அவரது குடும்பம் வறுமையில் உள்ளதாம். அவரது மகன் ஹர்குஷாகுல் கூறுகையில், நான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் மாதம் ரூ.6 ஆயிரம் வரை மட்டுமே வருமானம் கிடைக்கிறது. எனது தந்தையின் அடையாளத்தை பயன்படுத்தி நரசிங் தேவாங்கன் வாழ்நாள் முழுவதும் அரசு பணியில் இருந்துள்ளார். இது எனக்கு சமீபத்தில் தான் தெரியவந்துள்ளது.
எனது தந்தையும், நரசிங்கும் ஒரு காலத்தில் ஒன்றாக தொழிலாளர்களாக வேலை பார்த்துள்ளனர். அப்போதுதான் நரசிங் எனது தந்தையின் அடையாள அட்டையை திருடி அரசு வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்