search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புகார் கொடுக்க வந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்
    X

    புகார் கொடுக்க வந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்

    • இன்ஸ்பெக்டர் சிவ சங்கர் மீது அடுத்தடுத்து புகார் எழுந்த நிலையில் கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி. அனில் காந்த் விசாரணை நடத்தினார்.
    • சிவசங்கர் மீது பணியில் இருந்த காலத்தில் பலமுறை அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பதும், பல பெண்களிடம் அவர் தவறாக நடக்க முயன்றதும் தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர்கோடு போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சிவ சங்கரன்.

    இவர் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது.

    இந்த நிலையில் சிவ சங்கர், போலீஸ் நிலையத்திற்கு வந்த இன்னொரு பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக அடுத்த புகார் எழுந்தது.

    இன்ஸ்பெக்டர் சிவ சங்கர் மீது அடுத்தடுத்து புகார் எழுந்த நிலையில் கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி. அனில் காந்த் இது தொடர்பாக விசாரணை நடத்தினார். இதில் சிவசங்கர் மீது பணியில் இருந்த காலத்தில் பலமுறை அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பதும், பல பெண்களிடம் அவர் தவறாக நடக்க முயன்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவ சங்கரை உடனடியாக பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய போலீஸ் டி.ஜி.பி. அனில் காந்த் உத்தரவிட்டார்.

    சிவ சங்கர் பணியில் இருந்து ஓய்வுபெற இன்னும் 2 மாதங்களே இருந்த நிலையில் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×