search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதியில் செம்மரக்கடத்தல் வழக்கை விசாரிக்க 2 சிறப்பு கோர்ட்டுகள் அமைப்பு
    X

    திருப்பதியில் செம்மரக்கடத்தல் வழக்கை விசாரிக்க 2 சிறப்பு கோர்ட்டுகள் அமைப்பு

    • கடப்பாறை, கோடாரி, கத்தி ஆகியவற்றை வீசி தாக்குதல் நடத்துகின்றனர். இதில் சில வனத்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
    • செம்மரக் கடத்தல் வழக்குகள் அதிகமாகிவிட்டதால் இதற்காக திருப்பதியில் 2 சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    திருப்பதி:

    திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து விலை உயர்ந்த செம்மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருகின்றன.

    இவை சென்னை, மங்களூர் துறைமுகங்கள் வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. செம்மரம் கடத்தப்படுவதை தடுக்க ஆந்திர அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தனிப்படையினர் சேஷாசலம் வனப்பகுதியில் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

    ஆனால் அவ்வப்போது அவர்கள் மீது செம்மர கடத்தல் கும்பல் கற்கள், கடப்பாறை, கோடாரி, கத்தி ஆகியவற்றை வீசி தாக்குதல் நடத்துகின்றனர். இதில் சில வனத்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

    மேலும் துப்பாக்கி சூடு சம்பவங்களும் சேஷாசலம் வனப்பகுதியில் சர்வசாதாரணமாகி விட்டது. பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் செம்மரக்கடத்தல் முற்றிலுமாக தடுக்கப்படவில்லை. செம்மரம் வெட்டி கடத்தப்படும் வழக்குகளில் கைது செய்யப்படுபவர் சில நாட்களிலேயே ஜாமினில் வெளியே வந்துவிடுகின்றனர்.

    பின்னர் மீண்டும் அதே தொழிலை செய்து வருகின்றனர்.கோடிக்கணக்கில் இந்த தொழிலில் பணம் கைமாறுவதே இதற்கு காரணமாகும்.

    தற்போது செம்மரக் கடத்தல் வழக்குகள் அதிகமாகிவிட்டதால் இதற்காக திருப்பதியில் 2 சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.அதனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்று தொடங்கிவைத்தார்.

    இதில் செம்மர கடத்தல் வழக்குகள் விசாரிக்கப்பட்டு விவில் தீர்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×