என் மலர்
இந்தியா

திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு 18 மணி நேரம் ஆகிறது
- தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டம் சிறிதளவு குறைந்து உள்ளது.
- திருப்பதியில் நேற்று 73,811 பேர் தரிசனம் செய்தனர். 34,901 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டம் சிறிதளவு குறைந்து உள்ளது.
சிறப்பு தரிசன டிக்கெட்டில் வரும் பக்தர்கள் 4 மணி நேரமும், ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.
திருப்பதியில் நேற்று 73,811 பேர் தரிசனம் செய்தனர். 34,901 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.19 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
Next Story






