என் மலர்
இந்தியா

உண்மை வெல்லும் என்ற பெயரில் யாத்திரை தொடங்கும் சந்திரபாபு நாயுடு மனைவி
- சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது மனைவி புவனேஸ்வரி ஆந்திரா முழுவதும் யாத்திரை செல்ல உள்ளார்.
- சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டவுடன் அதிர்ச்சியில் இறந்த கட்சியினரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
திருப்பதி:
ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது நீதிமன்ற காவல் நேற்று முடிய இருந்த நிலையில் காணொலி மூலம் விஜயவாடா லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தினர். அப்போது சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் வருகிற நவம்பர் 1-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக கோர்ட்டு அறிவித்தது.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது மனைவி புவனேஸ்வரி ஆந்திரா முழுவதும் யாத்திரை செல்ல உள்ளார். உண்மை வெல்லும் என்ற பெயரில் புவனேஸ்வரி யாத்திரைக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் அவர் உண்மை வெல்லும் யாத்திரையை தொடங்குகிறார்.
அப்போது சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டவுடன் அதிர்ச்சியில் இறந்த கட்சியினரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
இதே போல தெலுங்கு தேசம் கட்சி பொதுச்செயலாளர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் பிரசார பயணம் பாதியில் நிறுத்தப்பட்டது. அதுவும் இந்த வாரம் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.






