search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கடன் கொடுக்காததால் இனிப்பு கடைக்குள் ஆசிட் வீச்சு- 7 பேர் காயம்
    X

    கடன் கொடுக்காததால் இனிப்பு கடைக்குள் ஆசிட் வீச்சு- 7 பேர் காயம்

    • ஜார்க்கண்ட் மாநிலம் ஹரிப்பூர் என்ற இடத்தில் இனிப்பு கடை உள்ளது.
    • இனிப்பு கடைக்குள் ஆசிட்டை வீசினார்.

    ஹரிபூர்:

    ஜார்க்கண்ட் மாநிலம் ஹரிப்பூர் என்ற இடத்தில் இனிப்பு கடை உள்ளது. இந்த கடைக்கு ஒருவர் இனிப்பு வாங்குவதற்காக வந்தார். அப்போது அவர் கடனுக்கு உணவு பொருட்கள் கேட்டார். ஆனால் உரிமையாளரோ முடியாது என மறுத்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் வீட்டுக்கு சென்று ஆசிட் பாட்டில் எடுத்து வந்தார்.

    பின்னர் அவர் இனிப்பு கடைக்குள் ஆசிட்டை வீசினார். இதில் கடையில் இருந்த 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிசிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×