search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உத்தரபிரதேசத்தில் ஆற்றில் கிருஷ்ணர் சிலையை கரைக்க முயன்ற 5 பேர் பலி
    X

    உத்தரபிரதேசத்தில் ஆற்றில் கிருஷ்ணர் சிலையை கரைக்க முயன்ற 5 பேர் பலி

    • ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் 6 பேரும் அடித்து செல்லப்பட்டனர். இதில் ஒருவர் மட்டும் நீந்தி கரை சேர்ந்தார்.
    • மற்ற 5 பேரும் ஆற்றில் மூழ்கினார்கள். அவர்கள் கதி என்ன என்று தெரியாமல் இருந்தது.

    நொய்டா:

    உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்த 6 பேர் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கிருஷ்ணர் சிலையை அங்குள்ள யமுனை ஆற்றில் கரைக்க சென்றனர்.

    ஆற்றின் நடுவில் கிருஷ்ணர் சிலை சிக்கி கொண்டது. அதனை மீட்க 6 பேரும் முயற்சித்தனர்.

    அப்போது ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் 6 பேரும் அடித்து செல்லப்பட்டனர். இதில் ஒருவர் மட்டும் நீந்தி கரை சேர்ந்தார். மற்ற 5 பேரும் ஆற்றில் மூழ்கினார்கள். அவர்கள் கதி என்ன என்று தெரியாமல் இருந்தது.

    இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று 5 பேரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஆற்றில் மூழ்கிய அங்கித் (வயது20), லக்கி (20), லலித் (20), பீரு (20), ருத்ராஜ் (20) ஆகிய 5 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர்.

    பின்னர் அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    Next Story
    ×