என் மலர்
இந்தியா

திருப்பதி கோவிலில் சாமி தரிசனத்துக்கு 18 மணி நேரமாகிறது
- திருப்பதியில் நேற்று 66,782 பேர் தரிசனம் செய்தனர். 36,229 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
- ரூ.3.71 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருப்பதி:
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரியாக பதவி ஏற்ற உடன் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். சந்திரபாபு நாயுடு தரிசனத்திற்கு வருவதால் முதன்மை செயலாளராக இருந்த தர்மா ரெட்டி கட்டாய விடுப்பில் சென்றார்.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சியாமளா ராவ் முதல்நிலை செயல் அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
திருப்பதியில் நேற்று 66,782 பேர் தரிசனம் செய்தனர். 36,229 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.71 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
இலவச தரிசனத்தில் 18 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






