என் மலர்
இந்தியா

மகன் திருமணம்: வாரணாசியில் பட்டுச்சேலைகள் வாங்கிய நீதா அம்பானி
- ஜூலை 12-ந்தேதி முதல் 3 நாட்கள் பிரமாண்டமாக நடக்கிறது.
- திருமண ஏற்பாடுகளை முகேஷ் அம்பானி-நீதா செய்து வருகிறார்கள்.
பிரபல தொழில் அதிபரும் உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி-நீதா தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச் சண்ட் திருமணம்.
மும்பையில் வருகிற ஜூலை 12-ந்தேதி முதல் 3 நாட்கள் பிரமாண்டமாக நடக்கிறது. திருமண ஏற்பாடுகளை முகேஷ் அம்பானி-நீதா செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே நீதாஅம்பானி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றார். அங்கு தனது மகன் திருமண அழைப்பிதழை சாமியின் பாதத்தில் வைத்து தரிசனம் செய்தார்.
நீதா அம்பானி, வாரணாசியில் உள்ள ஒரு தெருவுக்குள் நடந்து சென்று பட்டுச்சேலையினை வாங்கினார். அவர் பட்டுச் சேலைகளை பார்த்து கடை ஊழியர்களிடம் விசாரிக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் லக்கா பூட்டி பனாரசி ரக சேலைகளை வாங்கினார்.
Next Story






