என் மலர்tooltip icon

    இந்தியா

    பெரிய நிகழ்வில் சிறிய குறைபாடுகள் சகஜம்.. டெல்லி ஏஐ மாநாட்டுக்கு சசி தரூர் பாராட்டு
    X

    பெரிய நிகழ்வில் சிறிய குறைபாடுகள் சகஜம்.. டெல்லி ஏஐ மாநாட்டுக்கு சசி தரூர் பாராட்டு

    • இவ்வளவு பெரிய அளவிலான சர்வதேச நிகழ்வுகளில் சிறிய குறைபாடுகள் ஏற்படுவது சகஜம்தான்
    • சீன ரோபோ நாயை இந்திய தயாரிப்பாக ஏமாற்றி காட்சிப்படுத்தியதை ராகுல் காந்தி கண்டித்தார்.

    டெல்லியில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய ஏஐ மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது. இதில் நேற்று உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரான்ஸ் அதிபர் மேக்ரோனும் இதில் கலந்து கொண்டார்.

    மேலும் இன்றைய நிகழ்வில் ஸ்பெயின் பிரதமர், இலங்கை பிரதமர் உள்ளிட்ட பலநாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்நிலையில் மாநாட்டைப் பாராட்டிய காங்கிரஸ் எம்.பி சசி தரூர் "முதல் சில நாட்கள் மிகச் சிறப்பாகத் திட்டமிடப்பட்டு நடந்துள்ளன. செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டிற்காக உலகத் தலைவர்கள் ஒன்றுகூடியிருப்பது பாராட்டுக்குரியது" என்று தெரிவித்தார்.

    மாநாட்டின் ஏற்பாடுகளில் நிலவிய சில குழப்பங்கள் குறித்துக் கேட்டபோது, "இவ்வளவு பெரிய அளவிலான சர்வதேச நிகழ்வுகளில் சிறிய குறைபாடுகள் ஏற்படுவது சகஜம்தான்" என்று தெரிவித்தார்.

    சசி தரூரின் கருத்துக்கு மாறாக, ராகுல் காந்தி இந்த மாநாட்டை ஒழுங்கற்ற முறையில் நடத்தப்படும் விளம்பர கூத்து என்று சாடியுள்ளார்.

    மாநாட்டில் கால்கோடியாஸ் பல்கலைக்கழகம், சீன ரோபோ நாயை இந்திய தயாரிப்பாக ஏமாற்றி காட்சிப்படுத்தியதை கண்டித்து அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    மேலும் மாநாட்டில் நடக்கும் கண்காட்சியில் முதல் சில நாட்களில் லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் பல திருடுபோனது மற்றும் பங்கேற்றவர்களுக்கு தண்ணீர், உணவு மற்றும் அடிப்படை வசதிகள் கிடைக்காதது உள்ளிட்ட சில குளறுபடிகள் ஏற்பட்டன.

    காங்கிரஸ் தலைவர் கார்கே, மாநாட்டின் நிர்வாகச் சீர்கேடுகள் நாட்டுக்குப் பெரும் அவமானத்தைத் தேடித்தந்துள்ளதாக கூறினார்.

    பார்வையாளர்களுக்கு உணவு, தண்ணீர் வசதி கூட முறையாக இல்லை என்றும், மோடியின் விளம்பர ஆசையால் மாநாடு சீர்குலைந்துள்ளதாக விமர்சித்தார்.

    இதற்கிடையே இளைஞர் காங்கிரசார் இன்று மாநாடு திடலில் புகுந்து சட்டையை கழற்றி அமெரிக்க- இந்திய வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்த்தனர்.

    Next Story
    ×