search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காஷ்மீரில் ஒரே குடும்பத்தில் 6 பேர் மர்ம மரணம்
    X

    காஷ்மீரில் ஒரே குடும்பத்தில் 6 பேர் மர்ம மரணம்

    • போலீஸ் விசாரணையில் 6 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
    • பிரேத பரிசோதனை முடிவில் தான் 6 பேரும் எப்படி இறந்தனர் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சிட்ரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 6 பேர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பிணங்களை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் விசாரணையில் அவர்கள் 6 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. செரினா பேகம், அவரது மகள்கள் நவீமா அக்தர். ரூபினா பனோ, மகன் ஜாபர் சலீம், மற்றும் உறவினர்கள் நூர்முகமது, ஹபீப் ஆகியோர் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவில்லை.

    தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்பது மர்மமாக உள்ளது. பிரேத பரிசோதனை முடிவில் தான் 6 பேரும் எப்படி இறந்தனர் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×