என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
யாராவது உங்களுக்கு சவால் விடுத்தால் அவர்களை துண்டு, துண்டாக வெட்டுங்கள்: ஷிண்டே அணி எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
- எம்.எல்.ஏ. பிரகாஷ் சுர்வே தனது ஆதரவாளர்களிடம் கூறும் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
- பிரகாஷ் சுர்வே மீது நடவடிக்கை எடுக்க சிவசேனா போலீசில் புகார் அளித்து உள்ளது.
மும்பை :
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சிவசேனா தலைமைக்கு எதிராக திரும்பிய போது அவருடன் சென்றவர்களின் ஒருவர் மகாதானே எம்.எல்.ஏ. பிரகாஷ் சுர்வே. இவர் எதிரிகளை தாக்குமாறு அவர் தனது ஆதரவாளர்களிடம் கூறும் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் பிரகாஷ் சுர்வே கூறுயதாவது:-
யாரின் அடக்குமுறைக்கும் அடிபணிய வேண்டாம். யாராவது உங்களுக்கு சவால் விடுத்தால், நீங்களும் சவால் விடுங்கள். அவர்களை துண்டு துண்டாக வெட்டுங்கள். பிரகாஷ் சுர்வே இருக்கிறேன். கையை வெட்ட முடியவில்லை எனில், காலை உடையுங்கள். மறுநாளே நான் உங்களை ஜாமீனில் எடுக்கிறேன். கவலைப்பட வேண்டாம். நாம் யாரையும் தாக்கப்போதில்லை. ஆனால் நம்பை தாக்கினால், நாம் அவர்களின் குடலை உருவி விடுவோம் என கூறியுள்ளார்.
இந்த வீடியோ தொடர்பாக பிரகாஷ் சுர்வே மீது நடவடிக்கை எடுக்க சிவசேனா போலீசில் புகார் அளித்து உள்ளது. இதுதொடர்பாக சிவசேனா முன்னாள் கவுன்சிலர் உதேஷ் படேகர் தகிசர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்