என் மலர்
இந்தியா

இஸ்ரேலில் சிக்கித் தவித்த 235 இந்தியர்களுடன் டெல்லி வந்தடைந்தது 2வது விமானம்
- இந்தியர்களை அழைத்துவர ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
- அதன்படி, நேற்று முதல் விமானத்தில் 212 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர்.
புதுடெல்லி:
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய 7-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் அங்குள்ள இந்தியர்களை தாய்நாட்டுக்கு பத்திரமாக அழைத்து வருவதற்கான 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்த 212 இந்தியர்களுடன் தனி விமானம் நேற்று காலை இந்தியா வந்தடைந்தது.
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்த 235 இந்தியர்களுடன் இந்தியா புறப்பட்ட 2வது விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்தது என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.






