search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அசாம் சட்டசபையில் தொடர் அமளி: 3 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்
    X

    அசாம் சட்டசபையில் தொடர் அமளி: 3 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்

    • எம்எல்ஏக்கள், ராகுல் காந்திக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர்
    • காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.

    கவுகாத்தி:

    அசாம் சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர். ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்தார்.

    காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ராகுல் காந்திக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பியதோடு, பதாகைகளை ஏந்தியபடி நின்றனர். எம்எல்ஏக்களின் அமளியால் அவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட 3 எம்.எல்.ஏ.க்கள் நாள் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதில் இருவர் காங்கிரசை சேர்ந்தவர்கள். ஒருவர் சுயேட்சை எம்.எல்.ஏ. ஆவார்.

    ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.

    Next Story
    ×