search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திடீர் நெஞ்சுவலி.. ஓடும் ரெயிலில் மருத்துவ மாணவர் உயிரிழப்பு..!
    X

    திடீர் நெஞ்சுவலி.. ஓடும் ரெயிலில் மருத்துவ மாணவர் உயிரிழப்பு..!

    • ஆம்புலன்ஸ் மூலம் மாவட்ட மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
    • நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, ஊர் திரும்பும் போது இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    ஓடும் ரெயிலில் இளம் வாலிபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் சித்தோகர் பகுதியில் வசித்து வந்த அக்ஷய் என்ற 22 வயது வாலிபர் ராமேஸ்வரத்தில் மத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, ஊர் திரும்பும் போது இந்த துயர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    ராமேஸ்வரத்தில் நடைபெற்ற பகவத் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அக்ஷய் மற்றும் சித்தோகர் பகுதியை சேர்ந்த மேலும் பலர் ராஜஸ்தானில் இருந்து கிளம்பியுள்ளனர். சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முடித்த பிறகு, அங்கிருந்து ராஜஸ்தானுக்கு திரும்ப அக்ஷய் மற்றும் அவருடன் வந்த குழுவினர் கஜூராஹோ எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறியுள்ளனர்.

    ரெயில் பயணத்தின் போது அக்ஷய்-க்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பிறகு, ஆம்புலன்ஸ் மூலம் மாவட்ட மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த நிலையில், அக்ஷய் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மருத்துவம் படிக்க விரும்பிய அக்ஷய் அடுத்த மாதம் செர்பியாவுக்கு சென்று மருத்துவ படிப்பை தொடர இருந்த நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    Next Story
    ×