என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
![மம்தா பானர்ஜி வீட்டுக்குள் ஆயுதங்களுடன் நுழைய முயற்சி- வாலிபரை பிடித்து விசாரணை மம்தா பானர்ஜி வீட்டுக்குள் ஆயுதங்களுடன் நுழைய முயற்சி- வாலிபரை பிடித்து விசாரணை](https://media.maalaimalar.com/h-upload/2023/07/22/1919376-mamata1.webp)
மம்தா பானர்ஜி வீட்டுக்குள் ஆயுதங்களுடன் நுழைய முயற்சி- வாலிபரை பிடித்து விசாரணை
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- முதல்-மந்திரி மம்தா வீட்டில் இருக்கும்போது போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் ஒருவர் வந்தார்.
- காரில் ஒரு துப்பாக்கி, ஒரு கத்தி, கஞ்சா, பி.எஸ்.எப். உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பெயரில் அடையாள அட்டைகள் இருந்தன.
கொல்கத்தா:
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் வீடு கொல்கத்தாவின் காளிகட் பகுதியில் உள்ள ஹரீஷ் சாட்டர்ஜி தெருவில் உள்ளது.
நேற்று காலை முதல்-மந்திரி மம்தா வீட்டில் இருக்கும்போது போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் ஒருவர் வந்தார். அவர் அந்த தெருவுக்குள் நுழைய முயன்றார். அவரது காரை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியபோது முதல்-மந்திரி மம்தாவை சந்திக்க விரும்புவதாக அந்த நபர் கூறியுள்ளார்.
அவரது காரை போலீசார் சோதனையிட்டனர். அப்போது காரில் ஒரு துப்பாக்கி, ஒரு கத்தி, கஞ்சா, பி.எஸ்.எப். உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பெயரில் அடையாள அட்டைகள் இருந்தன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த நபரை பிடித்தனர்.
காளிகட் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் பெயர் ஷேக் நூர் ஆலம் என அடையாளம் காணப்பட்டார்.
இதுகுறித்து கொல்கத்தா காவல் ஆணையர் வினீத் கோயல் கூறும்போது, அந்த நபரிடம் இருந்து பல்வேறு போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அந்த நபரின் உண்மையான நோக்கத்தை அறிய முயன்று வருகிறோம். அந்த நபர் முதலில், தான் அனந்தபூரை சேர்ந்தவர் என்றார். பிறகு பாஸ்சிம் மெதினிபூர் என்றார். இதில் உண்மை என்ன என்பதை நாங்கள் சரி பார்த்து வருகிறோம் என்றார்.
மற்றொரு அதிகாரி கூறும்போது அந்த நபர் தற்போது போலீஸ் காவலில் உள்ளார். காளிகட் காவல் நிலையத்தில் காவல் துறையின் பல்வேறு பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரித்து வருகின்றனர். அந்த நபரின் காரும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)