என் மலர்
இந்தியா

வலி நிறைந்த இதயத்துடன் இருக்கிறேன்- பிரதமர் மோடி வேதனை
- குஜராத் பாலம் விபத்து நிகழ்வால் என் இதயம் வலியுடன் காணப்படுகிறது.
- குஜராத்தில் இன்று மோடியின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.
குஜராத் மாநிலம் கெவாடியாவில் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு அவர் இது தொடர்பாக பேசியதாவது:-
குஜராத் பாலம் விபத்து நிகழ்வால் என் இதயம் வலியுடன் காணப்படுகிறது. ஒரு புறம் வலி நிறைந்த இதயமாக இருந்தாலும் மறுபுறம் கடமைக்கான பாதை இருக்கிறது. நான் கெவாடியா பகுதியில் இருந்தாலும் எனது மனம் மோர்பியில் பாதிக்கப்பட்டவர்களுடன் உள்ளது. பாரம்பரிய நடனம் ஆடுவதற்காக நாடு முழுவதும் இருந்து நடன குழுக்கள் கெவாடியாவுக்கு வந்துள்ளன. ஆனால் தற்போதைய சூழ்நிலை காரணமாக அவர்களது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு மோடி பேசினார்.
இந்த சம்பவம் காரணமாக குஜராத்தில் இன்று மோடியின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. ரோடு ஷோ மற்றும் நலத்திட்ட நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க இருந்தார். இதே போல காங்கிரஸ் கட்சியும் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளது.
Next Story






