search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உத்தரகாண்டில் பரபரப்பு - வனப்பகுதியில் கிடந்த பாகிஸ்தான் நாட்டு கொடிகள், பேனர்கள்
    X

    பாகிஸ்தான் கொடி

    உத்தரகாண்டில் பரபரப்பு - வனப்பகுதியில் கிடந்த பாகிஸ்தான் நாட்டு கொடிகள், பேனர்கள்

    • உத்தரகாண்ட் மாநிலம் நேபாளம் மற்றும் சீனாவுடன் எல்லையை பகிர்ந்துள்ளது.
    • உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பாகிஸ்தான் நாட்டு கொடிகள், பேனர்கள் கிடந்தன.

    உத்தர்காசி:

    உத்தரகாண்ட் மாநிலம் நேபாளம் மற்றும் சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது.

    இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காசி மாவட்டத்தில் துல்யாடா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ஒட்டிய வனப்பகுதிக்குள் பாகிஸ்தான் நாட்டு கொடிகள் மற்றும் பேனர்கள் கிடந்தன.

    வனப்பகுதியில் கிடந்த பலூன்களில் பாகிஸ்தான் கொடிகள் மற்றும் உருது மொழியில் எழுதப்பட்ட பேனர்கள் கிடந்தன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் அங்கு ஆய்வு செய்தனர்.

    மத்திய விசாரணை அமைப்புகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.

    Next Story
    ×