என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
எம்.எல்.ஏ. கொலை வழக்கில் கைதான ரவுடியின் நாய் பசியால் உயிரிழப்பு
- அதிக் அகமது 5 உயர்ரக நாய்களை உத்தரபிரதேசத்தில் சாக்கியா பகுதியில் உள்ள தனது வீட்டில் வளர்த்து வந்தார்.
- மற்ற 4 நாய்களும் உணவு கிடைக்காமல் மோசமான நிலையில் இருந்து வருகிறது.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் (மேற்கு) பகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ராஜூபால். இவர் பதவி ஏற்ற ஒரு மாதத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். போலீஸ் விசாரணையில் தேர்தலில் அவரிடம் தோல்வி அடைந்த அஸ்ரப் என்பவரின் தூண்டுதலின் பேரில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அஸ்ரப்பின் அண்ணனும், பிரபல தாதாவும், அரசியல்வாதியுமான அதிக்அகமது கைது செய்யப்பட்டார். அவர் தற்போது குஜராத்தில் உள்ள சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதிக் அகமது 5 உயர்ரக நாய்களை உத்தரபிரதேசத்தில் சாக்கியா பகுதியில் உள்ள தனது வீட்டில் வளர்த்து வந்தார். அதில் ஒரு நாய் பல நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் வாடியுள்ளது. இந்நிலையில் பசி மற்றும் தாகத்தால் அந்த நாய் இறந்தது. இதே போல மற்ற 4 நாய்களும் உணவு கிடைக்காமல் மோசமான நிலையில் இருந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்