என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.58 கோடி இழந்த தொழிலதிபர்- ரூ.14 கோடி, 4 கிலோ தங்கத்தை மீட்ட போலீசார்
- ஆன்லைன் சூதாட்டக் கணக்கைத் திறப்பதற்காக தொழிலதிபருக்கு வாட்ஸ்அப்பில் இணைப்பைக் கொடுத்துள்ளார்.
- தொழிலதிபர் சைபர் போலீசில் புகார் செய்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஆன்லைன் சூதாட்டம் மூலம் 58 கோடி ரூபாயை இழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பா போலீசார் நடத்திய விசாரணையில், நான்கு கிலோ தங்க பிஸ்கட்களுடன் ரூ. 14 கோடி ரொக்கம் நேற்று மீட்கப்பட்டதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட நபர் சோந்து நவ்ரதன் ஜெயின் என்கிற அனந்த் குறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து, நாக்பூரிலிருந்து 160 கிமீ தொலைவில் உள்ள கோண்டியா நகரில் உள்ள ஆனந்தின் இல்லத்திற்கு போலீசார் விரைந்தனர். ஆனால் அதற்குள் ஆனந்த் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். குற்றம்சாட்டப்பட்ட நபர் துபாய்க்கு தப்பிச் சென்றுவிட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறிதது நாக்பூர் போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் கூறுகையில்,"ஆன்லைன் சூதாட்டத்தை லாபம் ஈட்டும் வழியாக பயன்படுத்துவதற்காக தொழிலதிபரை ஆனந்த் முதலில் நம்பவைத்துள்ளார். ஆரம்பத்தில் தயங்கிய தொழிலதிபர், இறுதியில் ஆனந்தின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து, ஹவாலா வியாபாரி மூலம் ரூ. 8 லட்சத்தை அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர், ஆன்லைன் சூதாட்டக் கணக்கைத் திறப்பதற்காக தொழிலதிபருக்கு வாட்ஸ்அப்பில் இணைப்பைக் கொடுத்துள்ளார். தொழிலதிபர் கணக்கில் ரூ. 8 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டதைக் காண்பித்தார். பின்னர், அவர் சூதாட்டத் தொடங்கினார்.
ஆரம்ப வெற்றிக்குப் பிறகு, தொழிலதிபரின் அதிர்ஷ்டம் கடுமையான சரிவைச் சந்தித்தது. ஏனெனில் அவர் ரூ. 5 கோடியை வென்றபோது ரூ.58 கோடியை இழந்தார்.
தொழிலதிபர் பணத்தை இழந்ததால் சந்தேகமடைந்து தனது பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். ஆனால் ஆனந்த் பணத்தை திரும்பி வழங்க மறுத்துள்ளார்.
பின்னர், தொழிலதிபர் சைபர் போலீசில் புகார் செய்தார். இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் கோண்டியாவில் உள்ள ஆனந்தின் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த நடவடிக்கையின் விளைவாக ரூ. 14 கோடி ரொக்கம் மற்றும் நான்கு கிலோ தங்க பிஸ்கட்கள் உட்பட கணிசமான அளவு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்